Tuesday, September 4, 2012

கடவுளிடம்

கடவுளிடம் கடவுளை கேள்.




ஒரு அரசன் தனக்கு ஆபத்தில் உதவிய மூவரை பார்த்து உங்களுக்கு என்ன வேணும் என கேட்டான். ஒருவன் வைரமாலை என்றான். இன்னொருவன் உன் அரச சபைபில் வேலை வேணும் என்றான். முன்றாதவனோ "அரசே..! எனக்கு நீங்கள் இந்த தினத்தில் வருசத்துக்க...ு ஒருமுறை என் வீட்டிற்கு வந்து தங்கி விட்டு போனால் போதும் அதுவே எனக்கு மகிழ்ச்சி..!" என்றான்.

அரசன் தங்கவேணும் என்பதால் மந்திரி நோட்டமிட்டார் அவன் கிராமத்தை, அழகாக புனரமைத்து அவனதுவீட்டையும் இடித்து இன்னும் பெரிதாய் கட்டி அழகாக்கினார் மந்திரி. அரசன் தன் மகளோடுவந்து தங்கினான். அரசனது மகள் அவனோடு காதல் கொண்டு இருவருக்கும் திருமனமாகி. அவன் பின்னர் அரசனாகவே ஆகிவிட்டான்.


இதே போல் தான் நாம் நமது சிற்றிவுக்கு ஏற்ப கடவுளிடம் இதைகொடு அதைகொடு என கேட்டு வாங்கி அதைமட்டும் பெற்று கொள்கிறோம். கடவுளேயே கேட்டால் அவன் எல்லையற்றவையை தருவதற்கு காத்து இருக்கிறான். என்பதை இந்த ராமகிருஷ்ணரின் கதைமூலம் அறியலாம். இதைதான் நம் முன்னோர் "கோவிலுக்கு போய் கேட்டவர்கள் கேட்தை மட்டும் வாங்கி வந்தார்கள், கேட்காமல் வந்தவர்கள் கடவுளையே கூட்டி வந்தார்கள்" என்றனர்

No comments:

Post a Comment