Tuesday, September 4, 2012

எந்தப் பிரிவு?

எந்தப் பிரிவு?




"ஆன்மீகத்தில் தான் எத்தனை பிரிவுகள் இதில் எந்தப் பிரிவில் நாம் சேர்வது? ஒன்றில் சேர்ந்தால் இன்னொன்றை மறுக்கவேண்டுமோ? வெறுக்கவேண்டுமோ? அது எப்படி நியாயமாகும்? எல்லாம் ஆன்மீகம் தானே..? "

இப்படி யோசித்துக் கவலைப்பட்டு எந்தப் பி...ரிவிலும் சேராமல். என்ன செய்யலாம் என்று புரியாமலே சுற்றிச் சுற்றி வந்தார் ஒருவர்.

அப்போதுதான் அவர் ஒரு துறவியை பற்றிக் கேள்விப்பட்டு

அவரைக் காண சென்றார்.

"ஐயா, நீங்கள் எந்தப்

பிரிவைச் சேர்ந்தவர்?" என்று விசாரித்தார்.

"எந்தப் பிரிவும் இல்லை..!"

"அப்படியா..? நிஜமாகவா சொல்கிறீர்கள்..?"

"ஆமாம். எனக்குத் தெரிந்ததெல்லாம் தியானம் செய்வது, என்னுடைய உடலாலும் மனத்தாலும் புத்தரை உணர்வது, அவ்வளவுதான்!"

சட்டென்று அவருடைய காலில் விழுந்து "ஐயா, இவ்வளவு நாளாக உங்களைதான் தேடிக்கொண்டிருந்தேன். என்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள்..!"


மதங்கள் மனிதரை பிரிக்கும் அடையாளங்கள் அல்ல. அவை உள்ளத்தை மேன்மையாக வைத்திருக்க, உயர்நிலையை அடைய உள்நோக்கி போவற்காக உருவாகியவையே..

1 comment:

  1. அதற்காக மதம் மாறிப் போவதை ஆதாிக்க முடியாது

    ReplyDelete