Tuesday, September 4, 2012

எல்லை இல்லாத தேசத்துக்கு நான் சொந்தகாரன்.

எல்லை இல்லாத தேசத்துக்கு நான் சொந்தகாரன்.




மன்னன் ஊர்வலம் வந்தான். தெரு ஓரத்தில் ஞானி ஒருவரின் எளிமையும் திருப்தியான மகிழ்ச்சியும் சாந்தமும் அவனை ஆச்சரிய படவைத்தது. அருகில் சென்று.., "ஆறு தேசம் எனக்கிருந்தும் திருப்தி இல்லை. இவ்வளவு குறைவான...செல்வம் இருந்தும் எப்படி நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்கள்..?" என கேட்டான் மன்னன்.


"மன்னா என்னைவிட குறைவான செல்வம் உள்ள நீ இதை சொல்வதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது..! எனக்கு காற்று, வானம், பூமி, சந்திரன், சூரியன், அண்டவெளி, பிரஞ்சம்..! ஏன் அதற்கு அப்பால் என்னுள் படைத்தவனே இருக்கிறான். எல்லை இல்லாத தேசத்துக்கு நான் சொந்தகாரன்..! என்று சிரித்தார் ஞானி.


நீங்களும் மனதின் சிறுவட்டத்தை விட்டு வெளியே வந்தால் புரியும். நான் இந்த உடல் அல்ல, முழுபிரபஞ்ஞமே நான் என்பது.

No comments:

Post a Comment