Tuesday, September 4, 2012

ஆன்மீகம்

அரியாசனத்தை துறந்த புத்தர். முதன் முதலாய் இராஜகிருக நகரில் ஒருநாள் முதன் முதலாக பிச்சை எடுத்தார். திருவோட்டில் சேர்ந்த உணவுடன் அவர் ஊருக்கு வெளியே ஒதுக்கு புறத்தில் போய் உணவருந்த அமர்ந்தார். ஓட்டில் இருந்து ஒரு பிடி எடுத்து வாயில் போடுகிறார...். வாய் குமட்டுகிறது. அரண்மனை அறுசுவை உணவு எங்கே..? கண்டவர் வீடுகளில் வாங்கிய கதம்ப சோறு எங்கே..? உணவு உள்ளே செல்ல மறுத்தது..! ஆனால் என் பெருமான் வெளியே தள்ள மறுத்தார். உலகின் துன்பத்தை எல்லாம் ஒழித்துகட்ட வந்த உத்தமர் பிச்சை சோற்றுக்கு புறங்கொடுத்து ஒடுவாரா..? எப்படியோ உள்ளத்தை உரமேற்றி கொண்டு அவர் அதை உண்டார். அப்போது அவருக்கு வயது 29. அன்றில் இருந்து 80 வயது வரை பிச்சை சோறே உண்டு வாழ்ந்தார்.



ஆன்மீக பிச்சை உழைக்க வழியின்றி உயிர் பிழைப்பதற்காக எடுப்பது இல்லை.., அது நான் என்ற ஆனவத்தை அழிப்பதற்காக ஆன்மீகம் வைக்கும் முதலிடம்.

No comments:

Post a Comment