Tuesday, September 4, 2012

ஜென்கவி




ஒரு பெண் துறவி பல வ...ருடங்களாக ஞான நூல்களை கற்றும்.., பயிற்சி எடுத்தும்கூட ஞானம் கிடைக்கவில்லை. இதில் அவளுக்கு மிகவும் வருத்தம். ஒரு பௌர்ணமி இரவு. அவள் ஆற்றில் தண்ணீர் எடுத்து கொண்டு ஆசிரமத்தை நோக்கி நடந்தாள். தூக்கி வந்த குடம் மிகப் பழமையாது. பாதி வழியில் கைதவறி அது கீழே விழுந்து உடைந்து போக.. தண்ணீர் தரையெங்கும் சிந்தி வீணாவதைப் பார்த்ததும்.., ஞானம் பிறந்தது. உடனே இந்த கவிதை எழுதினாள்.   நான் என்னால் முடிந்தவரை இந்தக் குடத்தைக் காப்பாற்றப் பார்த்தேன். முடியவில்லை..! உடைந்துவிட்டது..! இப்போது இந்தக் குடத்தில் துளி தண்ணீரும் மிச்சமில்லலை..! இப்போது இந்தத் தண்ணீரில் துளி நிலாவும் மிச்சமில்லை..!"

-ஜென்கவி

No comments:

Post a Comment