Tuesday, September 4, 2012

புகழ்..

ஊதுபத்தி.




ஒருபெரிய செல்வந்தர் ஒருவர் ஒரு துறவியை பார்க்க வந்தார். "சுவாமி.. உங்களைமாதிரி பெரிய ஞானி ஏன் இப்படி ஊர் ஊராக அலையவேண்டும்? என்றார். உங்களுக்கு நான் ஒரு பிரமாதமான ஆசிரமம் அமைத்துத் தருகிறேன்.. நீங்கள் அங்கேயே தங்கியிருந்து உங்களுடிய தியானங்களைத் தொடரலாம்.., நாடுமுழுவதிலும் இருந்து மக்கள் உங்களைத் தேடி வந்து பாடம் கற்றுக்கொள்வார்கள்..!"

துறவி சிரித்தார்..,



"அது எனக்குச் சரிப்படாது.. மன்னித்துவிடுங்கள்..!" என்றார்.



"ஏன் சுவாமி அப்படிச் சொல்கிறீர்கள்..? உங்களுடைய பு...கழ் நாடுமுழுவதும் பரவவேண்டும் என்று நான் விரும்புகிறேன்..!"



"உங்கள் எண்ணத்தில் தவறில்லை.., ஓர் ஊதுபத்தியை ஏற்றிவைத்தால் அறைமுழுவதும் நறுமணம் கமழ்கிறது. ஆனால் கொஞ்சநேரம் கழித்து அந்த ஊதுபத்தியே காணாமல் போய்விடுகிறது..! அப்படிச் சுயத்தை இழந்து புகழ் பரப்புவதால் யாருக்கு என்ன லாபம்..?" என்றார் துறவி.



செல்வம், புகழ், பதவி, மரியாதை போன்றவை கத்தியை நக்கித் தேன் குடிப்பது போல.., அந்த சுவைக்கு ஆசைப் பட்டால், நாக்கு போய்விடும். ஆற்றில் ஏந்திக் குடிக்கிற பச்சைத் தண்ணீர் போதும் என்பதை நன்றாக உணர்ந்தவர்கள் ஞானியர்கள்..

ஆன்மீகம்

அரியாசனத்தை துறந்த புத்தர். முதன் முதலாய் இராஜகிருக நகரில் ஒருநாள் முதன் முதலாக பிச்சை எடுத்தார். திருவோட்டில் சேர்ந்த உணவுடன் அவர் ஊருக்கு வெளியே ஒதுக்கு புறத்தில் போய் உணவருந்த அமர்ந்தார். ஓட்டில் இருந்து ஒரு பிடி எடுத்து வாயில் போடுகிறார...். வாய் குமட்டுகிறது. அரண்மனை அறுசுவை உணவு எங்கே..? கண்டவர் வீடுகளில் வாங்கிய கதம்ப சோறு எங்கே..? உணவு உள்ளே செல்ல மறுத்தது..! ஆனால் என் பெருமான் வெளியே தள்ள மறுத்தார். உலகின் துன்பத்தை எல்லாம் ஒழித்துகட்ட வந்த உத்தமர் பிச்சை சோற்றுக்கு புறங்கொடுத்து ஒடுவாரா..? எப்படியோ உள்ளத்தை உரமேற்றி கொண்டு அவர் அதை உண்டார். அப்போது அவருக்கு வயது 29. அன்றில் இருந்து 80 வயது வரை பிச்சை சோறே உண்டு வாழ்ந்தார்.



ஆன்மீக பிச்சை உழைக்க வழியின்றி உயிர் பிழைப்பதற்காக எடுப்பது இல்லை.., அது நான் என்ற ஆனவத்தை அழிப்பதற்காக ஆன்மீகம் வைக்கும் முதலிடம்.

இயற்கை.

இயற்கை.



குரு தனது நான்கு சீடர்களுக்கு ஏதோ கற்று கொடுக்க கையில் ஒரு கூழாங்கல்லை கொண்டுவந்து, முன்பாக அதை வைத்தார். அவர்களைப் பார்த்து மெல்லமாகச் சிரித்தார்.சீடர்கள் யோசித்தார்கள். சீடர்கள் ஆளாளுக்குப் பேச ஆரம்பித்தார்கள்.


"ஒருகாலத்தில் இந்தக் கல் நன்கு கரடுமுரடாக இருந்தது, பின்னர் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த முரட்டுத்தன்மையை இழந்து மென்மையடைந்து இப்படி அழகாக மாறியிருக்கிறது..!"

என்றார் ஒருவர்.


"இதுபோல, நாமும் நம் வாழ்க்கையில் தவறுகளைக் குறைத்துக்கொண்டால் மேன்மை அடை...வோம்"

என்று முடித்தார் இன்னொருவர்.


"ஒரு கூழாங்கல் நதியின் போக்கில் உருண்டு செல்கிறது. எதிர்த்து முரண்டு பிடிப்பதில்லை. அந்தப் பயணத்தை ஏற்றுக்கொண்டு அனுபவிக்கிறது, அதுதானே..!" என்றார் மூன்றாவது சீடர்.


நான்காவது சீடர்மட்டும் எதுவும் பேசவில்லை. மௌனமாக அந்தக் கல்லைப் பார்த்து அதன் அழகை, நேர்த்தியை வியந்துகொண்டிருந்தார். நெடுநேரம் கழித்து ஒரே ஒரு புன்னகைமட்டும் அவரது உதடுகளில் மலர்ந்தது. குருநாதர் அந்த நான்காவது சீடரின்அருகில் சென்று முதுகில் மகிழ்ச்சியோடு தட்டிக்கொடுத்தார்.


இயற்கையிடம் பாடம் கற்றுக்கொள்வது இரண்டாம் பட்சமே.. அதை அனுபவித்து உணர்ந்து ரசிப்பதே உயர்ந்தது. ஆமாம் எட்ட நின்று அருவியின் வேகத்தை அளக்கும் அறிஞன் இல்லை நான்.., அதில் மூழ்கி கும்மாளமிடும் ஒரு முட்டாளே நான்.

சகுனம்.

சகுனம்.




அரசன் ஒரு முறை வேட்டைக்குப் புறப்பட்டபோது, முதலில் நாவிதன் ஒருவன் எதிர்ப்பட்டான். எவ்வளவு அலைந்து திரிந்தும் வேட்டையில் அரசனுக்கு எந்த மிருகமும் சிக்கவில்லை. "அந்த நாவிதனை இழுத்து வந்து தூக்கில் போடுங்கள்..! அவன் முகத்தில் விழித்தத...ுதான் எனக்கு துரதிர்ஷ்டமாகி விட்டது..!" என்று அரசன் ஆணையிட்டான். நாவிதன் கதறக் கதற அரண்மனைக்கு இழுத்து வரப்பட்டான். தெனாலி ராமன் இதைக் கேள்விப்பட்டான். அரசவைக்கு வந்தான்.

"மன்னா..! எனக்கு தெரிந்த இன்னொருவரின் முகம் இதைவிட துரதிர்டமானது. அவருக்கும் இதே தண்டனை விதிக்கபடுமா..?"

"நிச்சயமாக..! யார் அந்த இன்னொருவர்..?"

"நீங்கள்தான் மன்னா..!"

"என்ன திமிர் உனக்கு..?' என்று அரசன் சீறினான்.

"பொய் இல்லை மன்னா..! நாவிதன் முகத்தைப் பார்த்தீர்கள். உங்களுக்கு வேட்டையில் வெற்றி இல்லை.. ஆனால் காலையில் உங்கள் முகத்தை பார்த்த நாவிதனுக்கோ உயிரே போகப் போகிறது. எந்த முகம் அதிகத் துரதிர்ஷ்டவசமானது என்பதை நீங்களே சொல்லுங்கள்..?" என்றான் தெனாலி ராமன்..

கடவுளிடம்

கடவுளிடம் கடவுளை கேள்.




ஒரு அரசன் தனக்கு ஆபத்தில் உதவிய மூவரை பார்த்து உங்களுக்கு என்ன வேணும் என கேட்டான். ஒருவன் வைரமாலை என்றான். இன்னொருவன் உன் அரச சபைபில் வேலை வேணும் என்றான். முன்றாதவனோ "அரசே..! எனக்கு நீங்கள் இந்த தினத்தில் வருசத்துக்க...ு ஒருமுறை என் வீட்டிற்கு வந்து தங்கி விட்டு போனால் போதும் அதுவே எனக்கு மகிழ்ச்சி..!" என்றான்.

அரசன் தங்கவேணும் என்பதால் மந்திரி நோட்டமிட்டார் அவன் கிராமத்தை, அழகாக புனரமைத்து அவனதுவீட்டையும் இடித்து இன்னும் பெரிதாய் கட்டி அழகாக்கினார் மந்திரி. அரசன் தன் மகளோடுவந்து தங்கினான். அரசனது மகள் அவனோடு காதல் கொண்டு இருவருக்கும் திருமனமாகி. அவன் பின்னர் அரசனாகவே ஆகிவிட்டான்.


இதே போல் தான் நாம் நமது சிற்றிவுக்கு ஏற்ப கடவுளிடம் இதைகொடு அதைகொடு என கேட்டு வாங்கி அதைமட்டும் பெற்று கொள்கிறோம். கடவுளேயே கேட்டால் அவன் எல்லையற்றவையை தருவதற்கு காத்து இருக்கிறான். என்பதை இந்த ராமகிருஷ்ணரின் கதைமூலம் அறியலாம். இதைதான் நம் முன்னோர் "கோவிலுக்கு போய் கேட்டவர்கள் கேட்தை மட்டும் வாங்கி வந்தார்கள், கேட்காமல் வந்தவர்கள் கடவுளையே கூட்டி வந்தார்கள்" என்றனர்

யோகியிடம்...

.தியானத்தில் இருந்த யோகியிடம் ஒரு தேவன் குறுக்கிட்டு யோகியே "உங்களுக்கு உதவுவதற்காக நான் கடவுளால் அனுப்பப்பட்டு இருக்கிறேன்..!" என்று வணங்கி நின்றான். யோகி புன்னகைத்தார். "வேறு யாரோ என்று நினைத்து நீ என்னிடம் வந்திருக்கிறாய்.. என் தேடலில் நா...ன் கடவுளின் உதவியை கேட்கவில்லையே..!" என்று சொல்லிவிட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார் யோகி.



தயவுசெய்து நீ நாஸ்திகனா என்று கேட்டு விடாதீர்கள்.., கடவுளை விடவும் முக்தியை மட்டுமே இலக்காக வைத்தவர் நாம் மட்டுமே என்பதை நீங்களும் அறிந்ததே. அது மட்டும் அல்ல.., நம் கடவுள்கள் குழப்பங்களை சந்தித்ததாகவும் அவர்கள் நம் ஞானியர்களிடம் வந்து தீர்வு பெற்றதாகவுமே நாம் புராணங்களில் பார்க்கிறோம். கடவுளைவிட மனிதத்துவத்தின் உயர்வை மிக உயர்வாக பார்த்தவர்களும் நாமே. இதைப்போல் வேறு எந்த கலாச்சாரங்களிலும் இல்லை...

புத்தர் முதல்முதலாய் தடுமாறினார்.

புத்தர் முதல்முதலாய் தடுமாறினார்.


------------------------------------------------------



என்ன..! எல்லம் அறிந்த ஞானி புத்தர்கூட தடுமாறினாரா..? உடனே என்ன அவசரம். எல்லாத்துக்கும் உங்களுக்கு அவசரம்தான்..! ஒன்னும் அவசரம் இல்ல. அதோ புத்தர் ஒரு ஊருக்கு உபதேசம் செய்ய ஆனந்தருடன் போகிறார். கொஞ்ச தூரம்தான்..! வாருங்கள் நாமும் அவர்களோடு பயணிப்போம்.

புத்தர் அந்த ஊருக்கு செல்ல தனது அரண்மனை வழியாக செல்லவேண்டியதாக இருந்கிறது. எப்படியும் அவரி...ன் ஊர் வழியாக சென்றால், உற்றார் உறவினர், தம் குடும்பத்தாரை எல்லாம் சந்திக்க வேண்டிவருமே. அப்படி அவர்களை சந்தித்தால்.., அவர்கள் மிக வருந்துவார்களே..! முக்கியமாய் அவரின் மனைவி யசோதா இந்த செய்தியை கேள்விப்பட்டால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவாளே என்று வருந்தினார் புத்தர். இருந்தாலும்.., எல்லாரையும் தன் அன்பால் சமாதானப்படுத்திவிட முடியும் என்று முழுமையாய் நம்பினார். தன் பிறந்த தேசத்திற்குள் அடியெடுத்து வைத்ததும். மக்கள் குதூகலித்தனர்.. கூக்குரலிட்ட விழுந்து தொழுது எதேதோ செய்து தம் அன்பை வெளிப்படுத்தினர்.


அப்போது புத்தரின் முக்கிய சீடர் ஆனந்தர் கேட்டார். "உங்கள் நாட்டில் இப்படி அன்பான மக்கள் இருக்க..! எப்படி இவர்களைவிட்டு வர முடிந்தது..?" புத்தர் சொன்னார், "அவர்கள் அன்பை வெளியில் தேடியும்.., கண்டுகொண்டும்விடுகிறார்கள். நானோ உள்ளே தேடவேண்டி இருந்தது. அதனால் வந்தேன்." என்றார். புத்தர் மீண்டும் சொன்னார். "ஆனந்தா.. நிச்சயம் நான் தடுமாற போகிறேன். என் பாதையை கவனி என்று புன்னகைத்தார்..!"


ஆனந்தருக்கோ ஆச்சரியம். மிகவும் சுத்தமான புதிதாக இடப்பட்ட தெருவில் கண்ணுகெட்டிய தூரம் வரை எந்த பள்ளமோ கல்லோ கட்டைகளோ இல்லை. புத்தரும் தெம்பாய் தெளிவாய் நடக்கிறார். எப்படி தடுமாற போகிறார் என்று சிந்தித்தபடியே நடந்தார்.


அங்கே தூரத்தில் ஒரு அரண்மனை தெரிந்தது. அடுத்த சில நிமிடங்களில்.திடீரென. ஒரு பெரும் கூட்டமாக மக்கள் அரண்மனையில் இருந்து வெளியே ஓடிவந்தனர். புத்தரை நோக்கி கைக்கூப்பி நின்றனர். சிலர் சாஷ்டாங்கமாய் விழுந்து தொழுதனர்.


அப்போது ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண். வணங்குவதற்கான எந்த செய்கைகளும் இல்லாமல் புத்தரை நோக்கி வந்தாள். புத்தரும் நேரே சென்றவண்ணம் இருந்தார். அந்த பெண்ணின் கண்களில் நீர்விட ஆரம்பித்தார். கைகள் அதுவாக கூப்பிநின்றன.


அந்த அம்மையாரின் அருகில் வந்துநின்றார் புத்தர்.

"நலமா..?" என்றார் அந்த பெண்.


"நலம் யசோதா..!" என்றார் புத்தர்.


"ஒரு கேள்வி கேட்கலாமா..?" என்றாள் யசோதா.


"எங்கெங்கோ காடுமலைகள் சுற்றி திரிந்து அடைந்த ஒன்றை...!


இந்த அரண்மனையிலேயே அடைந்திருக்க முடியாதா..?" என்றார்.


புத்தர் வாயெடுத்தார்..., ஆனால் சொல் வரவில்லை. முயன்றார். ஆனால் முடியவில்லை..!


இப்போதுதான் ஆனந்தர் புத்தர் முதல்முறையாக தடுமாறுவதை பார்க்கிறார். எதுவும் பேசாமல் புத்தர் மெளனமாக அந்த இடத்தை விட்டு விலகி சென்றார். ஆனந்தருக்கோ ஆச்சரியம்..! புத்தரிடம் கேட்டார்.., "ஏன் தடுமாறினீர்கள் புத்தரே..?"


புத்தர் சொன்னார்.., "ஞானமடைவதற்கு இந்த இடம்தான் சிறந்தது என்று எதுவுமில்லை என்று எனக்கு தெரியும். அதை வீட்டிலும், காட்டிலும் எங்கும் அடையலாம். எங்கும் அடையலாம் என்று சொல்லி அவளுக்கு புரியவைக்கவும் முடியுமா..? அல்லது அரண்மனையில் முடியாது என்று அவளிடம் பொய் சொல்லவும் முடியுமா..?" என்றார் புத்தர்.


ஆனந்தர் தெளிவாய் புன்னகைத்தார். புத்தருடன் பயணத்தை தொடர்ந்தார். நாமும் இவர்களோடு உள்ளோக்கிய பயணத்தை தெடர்வோமே..!



எல்லை இல்லாத தேசத்துக்கு நான் சொந்தகாரன்.

எல்லை இல்லாத தேசத்துக்கு நான் சொந்தகாரன்.




மன்னன் ஊர்வலம் வந்தான். தெரு ஓரத்தில் ஞானி ஒருவரின் எளிமையும் திருப்தியான மகிழ்ச்சியும் சாந்தமும் அவனை ஆச்சரிய படவைத்தது. அருகில் சென்று.., "ஆறு தேசம் எனக்கிருந்தும் திருப்தி இல்லை. இவ்வளவு குறைவான...செல்வம் இருந்தும் எப்படி நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்கள்..?" என கேட்டான் மன்னன்.


"மன்னா என்னைவிட குறைவான செல்வம் உள்ள நீ இதை சொல்வதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது..! எனக்கு காற்று, வானம், பூமி, சந்திரன், சூரியன், அண்டவெளி, பிரஞ்சம்..! ஏன் அதற்கு அப்பால் என்னுள் படைத்தவனே இருக்கிறான். எல்லை இல்லாத தேசத்துக்கு நான் சொந்தகாரன்..! என்று சிரித்தார் ஞானி.


நீங்களும் மனதின் சிறுவட்டத்தை விட்டு வெளியே வந்தால் புரியும். நான் இந்த உடல் அல்ல, முழுபிரபஞ்ஞமே நான் என்பது.

ஜென்கவி




ஒரு பெண் துறவி பல வ...ருடங்களாக ஞான நூல்களை கற்றும்.., பயிற்சி எடுத்தும்கூட ஞானம் கிடைக்கவில்லை. இதில் அவளுக்கு மிகவும் வருத்தம். ஒரு பௌர்ணமி இரவு. அவள் ஆற்றில் தண்ணீர் எடுத்து கொண்டு ஆசிரமத்தை நோக்கி நடந்தாள். தூக்கி வந்த குடம் மிகப் பழமையாது. பாதி வழியில் கைதவறி அது கீழே விழுந்து உடைந்து போக.. தண்ணீர் தரையெங்கும் சிந்தி வீணாவதைப் பார்த்ததும்.., ஞானம் பிறந்தது. உடனே இந்த கவிதை எழுதினாள்.   நான் என்னால் முடிந்தவரை இந்தக் குடத்தைக் காப்பாற்றப் பார்த்தேன். முடியவில்லை..! உடைந்துவிட்டது..! இப்போது இந்தக் குடத்தில் துளி தண்ணீரும் மிச்சமில்லலை..! இப்போது இந்தத் தண்ணீரில் துளி நிலாவும் மிச்சமில்லை..!"

-ஜென்கவி

உங்கள் வயது என்ன..?

உங்கள் வயது என்ன..?




குருவிடம் ஒருவர் கேட்டார்.

"குருவே, உங்கள் வயது என்ன..?"

"ஏழு வயது..!"குரு சற்றும் யோசிக்காமல் சொன்ன பதில்.

"என்னது..? ஏழு வயதா..? நம்பமுடியவில்லையே..!"

..."என்னுடைய முதல் ஐம்பது வருடங்களுக்குமேல் ஞானத்தைப்பற்றி எதுவும் தெரியாமல் வீணாகக் கழித்தேன். அதன்பிறகுதான் எனக்கு ஒரு நல்ல குருநாதர் கிடைத்தார்.., சரியான பாதை கிடைத்தது.., ஞானத்தைத் தேடத் தொடங்கினேன்.., இயற்கையை, இறைவனை, உலகத்தை, இவை ஒவ்வொன்றையும் ரசித்து அனுபவிக்கிற மனோநிலை கிடைத்தது.. அதன்பிறகு வாழ்ந்த ஏழு வருடங்களைமட்டுமே நான் என்னுடைய உண்மையான வாழ்நாளாகக் கருதுகிறேன்.. அதனால்தான் என் வயது ஏழு என்று சொன்னேன்..!"


இப்போ நீங்க சொல்லுங்க.. உங்களுக்கு எத்தனை வயது..?

எந்தப் பிரிவு?

எந்தப் பிரிவு?




"ஆன்மீகத்தில் தான் எத்தனை பிரிவுகள் இதில் எந்தப் பிரிவில் நாம் சேர்வது? ஒன்றில் சேர்ந்தால் இன்னொன்றை மறுக்கவேண்டுமோ? வெறுக்கவேண்டுமோ? அது எப்படி நியாயமாகும்? எல்லாம் ஆன்மீகம் தானே..? "

இப்படி யோசித்துக் கவலைப்பட்டு எந்தப் பி...ரிவிலும் சேராமல். என்ன செய்யலாம் என்று புரியாமலே சுற்றிச் சுற்றி வந்தார் ஒருவர்.

அப்போதுதான் அவர் ஒரு துறவியை பற்றிக் கேள்விப்பட்டு

அவரைக் காண சென்றார்.

"ஐயா, நீங்கள் எந்தப்

பிரிவைச் சேர்ந்தவர்?" என்று விசாரித்தார்.

"எந்தப் பிரிவும் இல்லை..!"

"அப்படியா..? நிஜமாகவா சொல்கிறீர்கள்..?"

"ஆமாம். எனக்குத் தெரிந்ததெல்லாம் தியானம் செய்வது, என்னுடைய உடலாலும் மனத்தாலும் புத்தரை உணர்வது, அவ்வளவுதான்!"

சட்டென்று அவருடைய காலில் விழுந்து "ஐயா, இவ்வளவு நாளாக உங்களைதான் தேடிக்கொண்டிருந்தேன். என்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள்..!"


மதங்கள் மனிதரை பிரிக்கும் அடையாளங்கள் அல்ல. அவை உள்ளத்தை மேன்மையாக வைத்திருக்க, உயர்நிலையை அடைய உள்நோக்கி போவற்காக உருவாகியவையே..

அவசியம் இல்லை.

அவசியம் இல்லை.




யோகி ஒருவர், தீவிரமான மௌனதை மேற்கொண்டிருந்தார்.

அவர் முப்பது வருடங்களுக்கு ஒருமுறைதான் பேசுவார். அதுவும் ஒரு நிமிடம்தான் பேசுவார். அதன்பிறகு மீண்டும் மௌனமாகிவிடுவார்.

இன்றைக்கு அந்த முப்பது வருடங்கள் முடியப்போகின்றன.

அந்தத் யோகியின் ஆசிரமத்தில் ஏகப்பட்ட பக்தர்கள் வந்து குவிந்திருந்தார்கள். எல்லோரும் அவருடைய ஒரு நிமிடப் பேச்சைக் கேட்டுவிடவேண்டும் என்கிற தவிப்பில் இருந்தார்கள்.


யோகி, "எல்லோருக்கும் வணக்கம்..!"

ஒருவர் கேட்டார், "நீங்கள் இப்படி மௌன விரதம் இருக்க ...வேண்டிய அவசியம் என்ன..? எங்களிடம் பேசுவதால், சொற்பொழிவுகள் ஆற்றி உங்களது ஞானத்தைப் பகிர்ந்து கொடுப்பதால் என்ன குறைந்து விடும்..?"


யோகி சிரித்தார்.. "நான் பேசவேண்டும் என்று நீங்கள் நினைப்பவை எல்லாம் பேசத் தகுதியற்றவை..! அவற்றைப் பேசிப் பிரயோஜனம் இல்லை.."என்றார்.


"பரவாயில்லை குருவே.., நீங்கள் தகுதியுள்ளதாக நினைப்பதை பிரயோஜனம் உள்ளவற்றைமட்டுமாவது பேசலாமே..?"


"தகுதியுள்ளவற்றை யாரும் பேசவேண்டிய அவசியம் இல்லை..!"என்றார் யோகி. ஒரு நிமிடப் பேச்சு முடிந்தது. முப்பது வருட மௌனம் தொடங்கியது.


தன்னை உணர்ந்துவிட்ட ஞானியர்கள் பலர் இன்னும் மெளனமாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் பேசவேண்டிய அவசியமோ, யாரையும் தமது பக்கம் திருப்ப வேண்டிய அவசியமோ இல்லை.

Monday, July 23, 2012

நாராதீய புராண சங்கைத் தெளிவு

ஆல்காட் , ஜான் ரத்தினம் இருவருடைய தோழமையினால் பண்டிதரின் சிந்தனை விசாலமடைந்தது .தமிழின பூர்வக்குடிகள் ஏன் தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள் ? என்ற தேடுதலால் ஊருஊராயி சுற்றித்திருந்தார். அப்போதுதான் "நாராதீய சங்கைத் தெளிவு " எனும் ஓலைச்சுவடி கிடைத்தது. அதில் பவுத்தர்கள் எப்படி தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள் என்பதையும் சாதி பேத விவரங்களையும் விவரித்திருந்தது. அதன் 570 பாக்களையும் படித்துவிட்டு , தன் நெடிய ஆராய்ச்சியின் விளைவாக பவுத்தத்தின் அடிப்படையை தாம் வந்தடைந்ததாக பண்டிதர் குறிப்பிடுகிறார்.
நீலகிரியில் ஏற்கனவே ஒடுக்கப்பட்டோரை ஒருங்கிணைத்து "திராவிட மகாஜன சபை " யை 1890 இல் துவக்கி நடத்தினார் . திராவிட மகாஜன சபையின் சார்பாக ஒரு மாநாட்டை ௦01-12-1891 இல் ஊட்டியில் நடத்தினார்
இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றி காங்கிரஸ் செயலாளருக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் அனுப்பட்டது.
அத்தீர்மானங்கள்:
பறையர் எனக் கூறுவது அவதூறு, குற்றம் என சட்டம் இயற்றவேண்டும்
கல்வி வசதி வேண்டும்
கல்வி உதவித் தொகை அளிக்கவேண்டும்
கல்வி கற்றவர்களுக்கு அரசு வேலை
உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம்
பொது இடங்களில் நுழைய உரிமை
அரசு அலுவலகங்களில் நுழைய அனுமதி
கிராம முன்சீப் பதவி
கிராம புறம்போக்கு தரிசு நிலங்கள் வழங்கவேண்டும்
சிறைச்சாலை சட்டம் 464 பிரிவை நீக்குதல்
1892 ஏப்ரல் மாதம் சென்னை விக்டோரியா அரங்கில் நடைபெற்ற சென்னை மகாஜன சபை மாநாட்டில், நீலகிரி பிரதிநிதியாக பண்டிதர் கலந்துகொண்டார் .இம்மாநாட்டில்தான் ஒடுக்கப்பட்டோருக்கு இலவச கல்வி ,புறம்போக்கு தரிசு நிலம், வேலைவாய்ப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார். இறைவனை வழிபட கோவிலுக்குள் நுழைய அனுமதி கேட்டபோது, அரங்கத்தில் உள்ள அனைவரும் எழந்து நின்று " அந்த பறையனை வெளியே துரத்துங்கள் " என சத்தம் போட்டார்கள் . பண்டிதருக்கு ஒரே அதிர்ச்சி. நாங்கள் இந்துக்கள் தானே ஏன் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கிறீர்கள் என திரும்பத்திரும்ப கோபமாக கேட்டார். "உங்களுக்குத்தான் முனியாண்டி, காளியாத்தா , மாரியாத்தா இருக்க்கே அதை கும்பிடுங்கோ " என்று சொல்லி பண்டிதரை மாநாட்டைவிட்டு விரட்டிவிட்டனர். பண்டிதர் கடும் கோபத்தோடு ஊர் திரும்பினார்

தமிழன் 102 ஆண்டுகள்







பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் தொல்தமிழர்கள் சாதியற்ற திராவிடர்கள் உரிமைகளைப் பற்றி பேசி, வேத பிராமணீயத்தை எதிர்த்து, சாதி ஒழிப்பு, சுயமரியாதை , பகுத்தறிவு, பிரதிநிதித்துவம் போன்ற நவீன கருத்தாக்கங்களை உருவாகியண்டிதர் . அயோத்திதாசரின் தமிழன் இதழ், 102 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
சென்னை இரயப்பெட்டையிலிருந்து புதன் தோறும் 19.06.1907 முதல் நான்கு பக்கங்களுடன் அன்றைய காலணா விலையில் "ஒரு பைசாத் தமிழன்"என்று தனித்துவமாய் பெயர் சூட்டப்பட்டு வெளிவந்தது. இந்த இதழ் யாருக்காக வெளிவருகிறது எனவும் விளக்குகிறார். " உயர் நிலையும், இடைநிலையும் ,கடை நிலையும் பாகுபடுத்தி அறிய முடியாத மக்களுக்கு நீதி , சரியான பாதை , நேர்மை ஆகியவற்றை கற்பிப்பதற்காக, சில தத்துவவாதிகளும் இயற்கை விஞ்ஞானிகளும் , கணிதவியலாளரும் இலக்கியவாதிகளும் பலரும் ஒன்று கூடி இப்பத்திரிக்கையை வெளியிட்டிருக்கிறோம். தமிழ் மனம் பரவ விரும்பும் தமிழர் ஒவ்வொருவரும் கையொப்பம் வைத்திதனை யாதரிக்க கோருகிறோம் ." என அறிவிக்கிறார்.



இதழின் முகப்பில் "ஒரு பைசாத் தமிழன்" என்று இதழின் பெயரை புத்த குறியீட்டு வடிவமான ஒன்பது தாமரை இதழ்களின் மீது எழுதி அதன் இடப்புறம் 'ஜெ து ' என்றும் வலப்புறம் 'மங்களம்' என்றும் எழுதியும் நடுவில் நன்மைக்கடைபிடி என எழுதி இரு புறமும் மலர் கொத்து என அழகுணர்வோடு மிக நேர்த்தியாக தன் இதழின் சின்னத்தை வடிவமைத்திருக்கிறார்.
முதல் இதழில் கடவுள் வாழ்த்து , அரசர் வாழ்த்து ,தமிழ் வாழ்த்து,
பூர்வத் தமிழொளி (அரசியல் தொடர்) வர்த்தமானங்கள் (நாட்டு நடப்புச்செய்திகள் ) சித்த மருத்துவ குறிப்புகள் இடம்பெற்றன.
ஓராண்டுக்குப் பிறகு வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க " அச்சுக் கூடமும் பத்திரிகைப் பெயரும் மாறுதல் அடைந்தது" 26.08 .1908என விளக்கமளித்து "ஒரு பைசா" நீக்கப்பெற்றது. பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு , வானிலை அறிக்கைகள், வாசகர் கடிதம் , அயல் நாட்டு செய்திகள் , விளம்பரம், நூல் விமர்சனங்கள் போன்றவை பிரசுரமாயின
தமிழகர்கள் அதிகம் வாழும் கர்நாடக, கோலார் தங்க வயல் , பர்மா தென்னாப்பிரிக்கா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழன் இதழ் பரவியது.
இந்து மதத்தில் காணப்படும் மூடநம்பிக்கைகளை மிக கடுமையாக விமர்சித்தது.

தமிழகத்தில் எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில்
வேத மத , பிராமணீய எதிர்ப்பு , சாதி ஒழிப்பு , தமிழ் மொழியுணர்வு , பகுத்தறிவு சமுக நீதி பிரதிநித்துவம் ,தலித் விடுதலை ,சுயமரியாதை இந்தி எதிர்ப்பு பெண் விடுதலை போன்ற கருத்துகளை உரையாடல் செய்து பல இயக்கங்களுக்கு ஒரு முழுமையான அரசியல் கருத்துத் தொகுப்பை வழங்கிய தமிழன் இதழ் குறித்து யாரும் பேச தயக்கப்படுகிரர்கள்
இதழியலும் அரசியலிலும் நவீனம் குறித்த கருத்தாக்கங்கள் தமிழன் இதழிலிருந்தே துவக்கம் பெற்றன என்று நாம் உறுதியாக கூறலாம்.

கௌதம புத்தர்

கௌதம புத்தர்


"ஆசையே" துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்னும் தத்துவத்தை உலகிற்கு போதித்தவர் கௌதம புத்தர். உலக மகா ஞானிகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர். பௌத்த மதம் என்னும் சமயத்தை தோற்றுவித்து மக்கள் யாவரும் முக்தி அடைய ஒரு எளிதான வழியைக் காட்டியவர். புத்தரின் போதனைகளைப் பின்பற்றுவோர் பௌத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அனைவருமே கௌதம புத்தர் அவதரித்த நாளைக் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு மே 23-ம் தேதி (திங்கட்கிழமை - 23.05.2005) அன்று புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது புத்தரின்

பிறப்பு :

கபிலவஸ்து அருகிலுள்ள லும்பினிக் கிராமத்தில் கி.மு. 566-ல் சாக்கிய குலத்தில் பிறந்தார் கௌதம புத்தர். பெற்றோர் அவருக்கு சித்தார்த்தர் என்று பெயரிட்டு அழைத்தனர். அவருடைய தந்தை சுத்தோதனர். தாயார் மாயாதேவி. சாக்கிய குலத்தைச் சேர்ந்த சுத்தோதனர், கபிலவஸ்துவைத் தலைநகரமாகக் கொண்ட சாக்கிய நாட்டின் மன்னராவார். கபிலவஸ்து நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளது. புத்தர் பிறப்பிடம் அசோக மௌரியர் எழுப்பிய ரும்மிந்தைத் தூண் சின்னத்தால் பிரசித்திப் பெற்று விளங்குகிறது. புத்தர் பிறந்த ஏழாவது நாளில் சுத்தோதனர் இயற்கை எய்தினார். பின்னர் புத்தர் தன் அத்தையான பிரஜூபதி கௌதமியால் வளர்க்கப்பட்டார். இளமைப் பருவத்தில் யசோதரா என்னும் மங்கையை மணந்து இல்லற வாழ்க்கையை நடத்தினார். இவருக்கு ராகுல் என்ற மகன் பிறந்தான். சில காலங்களுக்கு பிறகு புத்தருக்கு அரண்மனை வாழ்க்கை பிடிக்கவில்லை. அமைதியை இழந்தார். இவ்வுலக வாழ்க்கையில் கண்ணுற்ற துன்பங்களைப் பற்றி ஆராயத் தொடங்கினார். ஒரு நாள் இவர் வெளியே சென்றுக் கொண்டிருந்தபோது கண்ட காட்சிகள் இவர் மனதை வெகுவாக புண்படுத்தின. வயது முதிர்ந்த ஒரு மனிதரையும், நோயாளி ஒருவரையும், பிணம் ஒன்றையும், துறவி ஒருவரையும் கண்டார். இதனால் மனம் கலங்கினார். இதற்கு முன்னால் இது போன்ற காட்சிகளையும் இவர் நேரில் கண்டதில்லை. ஆகையால் இத்தகைய காட்சிகள் இவரது சிந்தனைகளை வெகுவாகத் தாக்கியது.

துறவறம் :

உலக வாழ்க்கையில் காணப்படும் துன்பங்களைப் பற்றியும், அதற்குப் பின்னர் என்ன நடைபெறும் என்பது பற்றியும் தீவிரமாக ஆராயத் தொடங்கினார். இத்தகைய துன்பங்களுக்கு நிவாரணம் காண வேண்டும் என்பதே தனது லட்சியமாகக் கொண்டார். எனவே இல்லற வாழ்க்கையை துறக்க தீர்மானித்தார். தனது 29-வது வயதில் கடும் துறவறத்தை புத்தர் மேற்கொண்டார். உண்மையைக் காண்பதே தனது முதன்மையான பணி எனக் கருதி, எல்லாவற்றையும் களைந்துவிட்டு அலைந்து திரியும் துறவியின் வாழ்க்கையை மனம் உவந்து மேற்கொண்டார். துறவிக்கோலம் பூண்ட புத்தர், வாழ்க்கையைப் பற்றியும் மரணத்திற்குப் பின்னர் நடைபெறுவது பற்றியும் அறிய விரும்பினார். இதற்காக இவர் முதலில் வைசாலியில் தங்கியிருந்த அலாரர் என்பவரிடம் பாடங்களைக் கேட்டறிந்தார். பின்னர் இராஜகிரகத்தில தங்கியிருந்த ஆசிரியரான உருத்திரிகா என்பவரிடம் சீடராக அமர்ந்தார். அவருடைய போதனை புத்தரை வெகுவாக கவரவில்லை. எனவே அவரை விட்டு விலகிச் சென்றார். பின்னர் கௌதமர் உருவேலா என்னும் இடத்தில் உணவு இன்றி கடும் தவம் மேற்கொண்டார். சுமார் 6 ஆண்டுகள் இவ்வாறு கழிந்தது. எனினும் தமது லட்சியத்தை அடைவதற்கு இது பயனற்றது என அறிந்தார்.

ஞானோதயம் :

பிறகு நைரஞ்சனா ஆற்று கால்வாயொன்றில் புனித நீராடி இக்கால போத்-கயா என்னுமிடத்திலுள்ள பிப்பல் அல்லது அரச மரத்தடியில் அமர்ந்தார். இறுதியில் அங்கு அவருக்கு உயர்வான ஞானம் புத்தொளி தோன்றியது. தனது 36-வது வயதில் ஞானோதயம் பெற்று நிர்வாணத்தை அடைந்தார். அன்று முதல் இவர் "புத்தர்" அல்லது ஒளிபெற்றவர் என்றும் "ததாகதர்" (உண்மையை அறிந்தவர்) என்றும், சாக்கியமுனி அல்லது சாக்கிய வம்சத்து முனிவர் என்றும் பல பெயர்கள் சொல்லி அழைக்கப்பட்டார். "புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள். தன் ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே "நிர்வாணம்" அல்லது "நிர்வாண நிலை" என்று சொல்லுவார்கள்.

கொள்கைகள் :

ஒளி பெற்ற புத்தர், வாரனாசியின் அருகாமையிலுள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள "மான் பூங்கா" என்னுமிடத்தில் தன் கொள்கையை போதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் அயோத்தி, பீகார், அதையடுத்த பகுதிகளின் மக்களுக்கும், மன்னருக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். இராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை நடத்தி வெற்றிகண்டார். கபிலவஸ்துவில் ராகுல், மகா பிரஜாபதி ஆகியோரை தன் சமயத்தில் சேர்த்துக் கொண்டார். மகத மன்னர்களான பிம்பிசாரர், அஜாதசத்துரு ஆகியோர்களை பௌத்த சமயத்தை தழுவும்படி செய்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பௌத்தத்தை தழுவிட வழிகோலினார். இந்த இடங்களிலெல்லாம் அவரது நான்கு உண்மைகளையும், "நான்கு அதிசய சத்தியங்களையும்", "எண் வகை வழிகளையும்" கூறினார். பிறகு தனது 80-வது வயதில், குசி நகரத்தில் கி.மு. 486-ல் உயிர் நீத்தார். கி.மு. 3-ம் நூற்றாண்டு வட இந்தியா, கிழக்கிந்தியா, ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் புத்த மதம் பரவி இருந்தது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் புத்தமதம் கிழக்கு நாடுகளுக்கு பரவியது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திபெத்திற்குச் சென்றது.

புத்தரின் போதனைகள் :

புத்த சமயக் கொள்கைகளைச் சுத்த பிதகம் கூறுகின்றது. மனத் துயரிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுபடுவதே பௌத்த சமயத்தின் முக்கிய நோக்கமாகும். தன்னலம் துன்பங்களுக்கெல்லாம் காரணமாக இருக்கிறது. ஆசையை ஒழித்தால் தான் மன அமைதியும், ஆனந்தமும் அடைய முடியும். தீமைகளை தவிர்த்து நன்மைகளைச் செய்து வந்தால் ஆசை அகன்றுவிடும். "நான்கு உயரிய உண்மைகளும்", "எண் வகை வழிகளும்" பிறவி என்பது ஒருவரது செயலினால் ஏற்படும் பயன் என்ற கோட்பாடும் தத்துவ இயலுக்கு புத்தர் ஆற்றிய அரிய தொண்டாகும்.

நான்கு உண்மைகள் :

1. துன்பம் : இவ்வுலக வாழ்க்கை துன்பகரமானது. ஏழ்மை, நோய், மூப்பு, இறப்பு முதலியவை நிறைந்த உலக வாழ்க்கை, எளிதில் விலக்கிக் கொள்ள முடியாத துன்பம் நிறைந்தது. இவை நம்மை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 2. அதன் தோற்றம் : சிற்றின்ப ஆசையே துன்பத்தின் காரணம். தான் இன்பமாக வாழ வேண்டும் என்ற தன்னலம் கலந்த ஆசையே துன்பங்களுக்கு காரணமாகும். 3. அதை ஒழித்தல் : ஆசை ஒழிக்கப்பட்டாலொழிய துன்பத்தை ஒழிக்க முடியாது. 4. அட்டசீலம் : (எண்வகை வழி) துன்பத்தை ஒழிக்கும் வழி இதுவேயாகும். எண்வகை வழிமுறைகளை கடைபிடித்தால் ஆசைகளை ஒழித்துவிடலாம். நடுவு நிலை வழி, இடை வழி : புத்தர் கூறிய சமய முறையில் ஆசையை அறவே ஒழித்து, பல்வகையான வாழ்க்கையின் மீது நாட்டம் கொள்ளாமல், வாழ்க்கையில் ஆசையால் விளையும் துன்பங்களை ஒழிப்பதே நிர்வாணமாகும். இடைவழி : ஆழ்ந்த அறிவு, விவேகம், புலமை, அமைதி, நிர்வாணம் ஆகியவற்றை அடையச் செய்கின்றன. இடைவழியில் எட்டு கொள்கைகள் உள்ளன. இதற்கு "அட்ட சீலம" அல்லது "எண் வகை வழிகள்" என்று பெயர். அட்டசீலம் அல்லது எண்வகை வழிகள் : 1. நல்ல நம்பிக்கை : நான்கு உண்மைகளில் நம்பிக்கைக் கொள்ளுதல். 2. நல்லெண்ணம் : இல்லற வாழ்க்கையை விட்டொழிக்கவும், சினத்தை அகற்றவும், ஒருவருக்கும் தீமை செய்யாமலிருக்கவும் தீர்மானித்தல். 3. நல்வாய்மை அல்லது நல்லமொழி : பயனற்றதும், கடுமையானதும் பொய்யானதுமான சொற்களை கூறாதிருத்தல். 4. நற்செய்கை : பிறரை துன்புறுத்தாமலும் (அகிம்சை) களவாடாமலும் நன்னெறி தவறாமல் இருத்தல். 5. நல்வாழ்க்கை : பிச்சை எடுத்து வாழ்தல். 6. நன் முயற்சி : தீமையை அகற்றி நற்குணங்களை வளர்த்தல். 7. நற்சாட்சி : சிற்றின்ப ஆசையையும், துன்பத்தையும் அடையாவண்ணம் விழிப்புடனிருத்தல். 8. நல்ல தியானம் : லட்சியத்தை (குறிக்கோளை) அடைய மனம் ஒருவழிபட்டு சிந்தித்தல். சுருக்கமாகக் கூறினால், புத்தருடைய அறிவுரைகளில் நம்பிக்கையுடன் அவற்றை அறியவும், அதன்படி நடக்கவும் முயன்று ஒழுக்கம் தவறாத நடத்தையுடன் மனதை ஒருவழிபடுத்தி இறுதியான இன்பத்தை (வீடு, மோட்சம்) அடைய வேண்டுமென்பதாகும். அவரது காலக் கட்டத்தில் இந்திய தத்துவ இயலில் ஆதிக்கம் செலுத்தி வந்த கடவுள், ஆன்மா, மாறாத நிலையான உண்மை அல்லது வஸ்து போன்ற கருத்துகளை அறிவார்த்த முறையில் களைந்து உலகம், வாழ்க்கை, சிந்தனை குறித்த முற்றிலும் மாற்றான கருத்துகளை முதன் முதலில் பறை சாற்றியவர் புத்தர் என்றால் அது மிகையாகாது.

Tuesday, June 5, 2012

புத்தர் அவருடைய சீடன் ஆனந்தாவிடம் 'நிலையாமையை'ப் பார்க்கச் சொன்னார். ஒவ்வொரு மூச்சிலும் மரணத்தை பார்க்கச் சொன்னார். மரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்; வாழ்வதற்காகச் சாகவேண்டும். அப்படியென்றால் என்ன? இறப்பதென்றால் நம் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் முடிவு கண்டு நிகழ் காலத்தின் உண்மையான நிலையில் இருப்பது தான். நாம் நாளைக்கு இறக்க முடியாது; இப்போதே இறக்க வேண்டும். உங்களால் செய்ய முடியுமா? முடியுமென்றால் கேள்விகளே இல்லாத அமைதி உங்களுக்குத் தெளிவாக விளங்கும். நம் பிறப்பும் இறப்பும் ஒன்றுதான். ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்கமுடியாது. மக்கள் இறப்பின் போது அழுவதையும் துக்கப் படுவதையும், பிறப்பின் போது மகிழ்ந்து பூரிப்பதையும் பார்க்கும் போது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது. இது தவறான கருத்து. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செய்கை. அழவேண்டுமென்றால் பிறக்கும் போது அழுவதே சரியானது. ஏனென்றால் பிறப்பில்லாமல் இறப்பில்லை. புரிகிறதா உங்களுக்கு. இந்திய இளைஞர்களே! பெருஞ்செயல்களைச் செய்து முடிப்பதில் எப்போதும் முன்னேறிச் செல்லுங்கள். ஏழைகளிடமும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களிடமும் இரக்கம் காட்டும் போது, நமக்கு மரணமே வாய்த்தாலும் கூட, அவர்களுக்கு இரக்கம் காட்டுவதே நமது லட்சியமாகும்.. துன்பம் ஏற்படாமலிருக்க வழி பிரியம் உள்ளவரைக் காண்பதும், பிரியம் இல்லாதவரைக் காண்பதும் வேதனை தரும். பிரியம் உள்ளவரிடமிருந்து பிரிவது வேதனைதான். பிரியம் ... இல்லாதவனிடம் அன்பில்லை. அதனால் வேதனைதான் மிஞ்சும். துன்பத்தை அழிக்கத் தூய வாழ்க்கை வாழுங்கள். உன் துன்பத்திற்கு எது காரணமாய் இருந்தாலும் இன்னொருவரைப் புண்படுத்தாதே. துன்பம் ஏற்படாமலிருக்க வழி எதிலும் ஆசை வேண்டாம். ஆசைப்பட்ட பொருளை இழப்பது துன்பம்தான். ஆசையும் பொருளும் அற்றவனுக்கு விலங்குகள் இல்லை. ... கோபத்தை கைவிடு. செருக்கை கைவிடு. உலகப் பற்றுக்கள் அனைத்தையும் ஒழி. எதையும் தனது என்று நினையாதவனுக்குத் துன்பங்கள் ஏற்படுவதில்லை. துன்பம் ஏற்படாமலிருக்க வழி சம்சார யாத்திரையை முடித்துக் கொண்டவனுக்கு, துக்கத்திலிருந்து நீங்கியவனுக்கு, பற்றுக்களிலிருந்து விடுதலை பெற்றவனுக்கு எல்லா விலங்குகளையும் உடைத்தெறிந்தவனுக்கு துன்பம் ஏற்படுவதில்லை. துன்பம் ஏற்படாமலிருக்க வழி துன்பம் இத்தகையது என்று உணர்ந்தால், நாம் துன்பப்படுவோர் அனைவரையும் நம் சகோதரர்களாகப் பாவிப்போம். துன்பம் ஏற்படாமலிருக்க வழி தன் பகைவனால் ஏற்படும் துன்பத்தைக் காட்டிலும், தன்னை வெறுப்பவனால் ஏற்படும் துன்பத்தைக் காட்டிலும், அடக்கம் இல்லாத மனம் ஒருவனுக்கு அதிகத் துன்பத்தைத் தருகிறது. துன்பம் ஏற்படாமலிருக்க வழி மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும், செயல் புரிந்தாலும் வண்டிச்சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வதுபோல துக்கம் அவனைத் தொடர்ந்து செல்லும். எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! நீங்களும் விழித்திருங்கள், மற்றவர்களையும் விழிக்கச் செய்யுங்கள். உங்களுடைய இந்த உலக வாழ்க்கை முடிவடைவதற்கு முன்னால் மனிதப் பிறவியினால் பெறுவதற்கரிய பெரிய நன்மையை அடையுங்கள். மரணமே வந்தாலும் கலங்காதீர்கள் * நாம் அனைவரும் உண்மையானவர்களாகத் திகழ்வோமாக. லட்சியத்தை நம்மால் பின்பற்ற முடியவில்லை என்றால், நமது பலவீனத்தை நாம் ஒப்புக் கொள்வோம். லட்சியத்தை நாம் இழிவுபடுத்தாமல் இருக்க வேண்டும். லட்சியத்தைத் தாழ்ந்த நிலைமைக்குக் கொண்டு செல்ல எவரும் வேண்டாம் * இந்திய இளைஞர்களே! பெருஞ்செயல்களைச் செய்து முடிப்பதில் எப்போதும் முன்னேறிச் செல்லுங்கள். ஏழைகளிடமும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களிடமும் இரக்கம் காட்டும் போது, நமக்கு மரணமே வாய்த்தாலும் கூட, அவர்களுக்கு இரக்கம் காட்டுவதே நமது லட்சியமாகும். மரணமே வந்தாலும் கலங்காதீர்கள் * நாம் அனைவரும் உண்மையானவர்களாகத் திகழ்வோமாக. லட்சியத்தை நம்மால் பின்பற்ற முடியவில்லை என்றால், நமது பலவீனத்தை நாம் ஒப்புக் கொள்வோம். லட்சியத்தை நாம் இழிவுபடுத்தாமல் இருக்க வேண்டும். லட்சியத்தைத் தாழ்ந்த நிலைமைக்குக் கொண்டு செல்ல எவரும் வேண்டாம். தர்ம சிந்தனைகள் மனதிலிருந்து உதயமாகிறது. தர்ம சிந்தனைகளே மனமாகிறது . தீய சிந்தனைகளும் தீய செயல்களும், இழுத்துச் செல்லும் எருதுகளைப் பின்தொடர்ந்து செல்லும் வண்டியைப் போல , அவனுக்கு துன்பத்தையேத் தரும். கடவுள் அல்லது ஒரு ஒருமிய சக்தி உலகை தோற்றுவிக்கிவில்லை என்பது பெளத்தத்தில், புத்தர் போதனைகளில் முக்கிய ஒரு கொள்கை. இக்கொள்கையை தமிழில் சார்பிற்றோற்றக் கொள்கை என்றும் சமஸ்கிரதத்தில் பிரதித்தியசமுப்பாதம் என்றும் ஆங்கிலத்தில் Dependent Origination என்பர். * சத்தியத்தையே தீபமாகப் பற்றிக் கொள்ளுங்கள். சுயநலத்தை ஒழித்து எல்லா உயிர்களையும் நேசியுங்கள். ஒழுக்கம் என்னும் அடித்தளத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். தூங்க முடியாமல் விழித்திருப்பவனுக்கு இரவு கொடியதாகும். களைத்துப் போனவனுக்கு செல்லும் வழி மலைப்பைத் தரும். அதுபோல தர்மத்தை பின்பற்றாதவனுக்கு வாழ்க்கை துன்பத்தைத் தரும் வரையறுக்கப்பட்ட உணர்கிற பொருள் எல்லாம் நிலையற்றவை என்று "அனைத்தும் புரிந்த அந்த ஒருவனுக்குத்" தெளிவாகத் தெரியும். அதனால் அந்த "அனைத்தும் தெரிந்தவன்" மகிழ்வதும் இல்லை; வருந்துவதும் இல்லை. ஏனெனில் மாறிக்கொண்டிருக்கும் நிலைமைகளை அவன் தொடர்வதில்லை. மகிழ்ச்சியடைவது பிறப்பதற்குச் சமம்; சோர்வடைவது இறப்பதற்குச் சமம். இறந்த பிறகு மறுபடியும் பிறக்கின்றோம். பிறந்ததால் மறுபடியும் இறக்கின்றோம். நொடிக்கு நொடி பிறப்பதும் இறப்பதும் தான் முடிவற்றுச் சுழன்று கொண்டிருக்கும் சம்சார சக்கரமாகும் ‎1. சாதி ஒழிய வேண் டும் 2. சாதி ஒழிய இந்து மதம் ஒழிய வேண் டும். அதன் வர்ணசிரம தர்மம் ஒழிய வேண்டும் 3. இவை ஒழியாமல் பாதுகாப்பவர்களாகவும் இந்த இந்து வர்ண சிரம சாதி அமைப்பில் பலனடைபவர்களாகவும் இருப்பவர்கள் பார்ப்பனர்கள், 4. இவர்களின் பார்ப்பனர்களின் சமூக ஆதிக்கத்தை ஒழிக்காமல் மேற்கூறிய நோக்கங்கள் ... நிறைவேறாது. எனவே இவர்களை இவர்களின் ஆதிக்கத்தை முழு மூச்சாக எதிர்க்க வேண்டும் 5. இந்த இந்து வர்ணசிரம அமைப்பை வைத்துக் கொண்டு தீண்டாமையை எதிர்ப்பேன் அல்லது ஒழிப்பேன் என்று சொல்கிற காந்தி கபட வேடதாரி. அவரையும் எதிரியாக இனங் காணுதல் மற்றும் காட்டுதல் 6. மாற்று சமூக நடவடிக்கைகளாக இட ஒதுக்கீடு அரசியலையும் கலாச்சாரத் தளத்தில் கலப்பு திருமணத்தையும் தூக்கிப் பிடித்தது. .கடவுளே இல்லை என்று உலகுக்கு போதித்தவன் புத்தன் அவனையே கும்பிடுகிறான் ஒரு பித்தன். ஆம் நண்பர்களே பெளத்தம் என்பது இல்லறம் செழிக்கும் நல்வாழ்விற்கான பாதை அல்லது ஒரு தத்துவம். வாழ்வை இன்பமாக கழிக்க உலக ஆசைகளை துறக்கவேண்டும், அன்பை மட்டுமே வளர்க்க வேண்டும்; அமைதியான தியானத்தின் மூலம் மனிதன் இந்த ஞானத்தை அடையவேண்டும் என்கிறார் புத்தர். இரக்கத்தோடும் உபகார சிந்தையோடும் இருப்பது மகிழ்ச்சியோடு இருப்பதாகும...். உலகத்தில் உள்ளும் புறமும் அறிவற்ற வஸ்து எதுவும் கிடையாது. உலகத்தின் பொருள்கள் யாவும் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண் டேயிருக்கின்றன. தோன்றியது அழியும். கோவணாண்டி கோலமோ ஜடை முடியோ, அழுக்கேறிய உடம்போ, பட்டினி கிடத்தலோ, மண்மீது புரளுவதோ, மூச்சை அடக்கி உட்கார்ந்திருத்தலோ, ஆசை வெல்லாத ஒருவனை பரிசுத்தவானாக்கி விடாது. முட்டாள்களுடன் கூடி வாழ்வதை விட தனியாக வாழ்வதே மேல். பேசாமல் சும்மா உட்கார்ந்திருப்பவனையும் திட்டுகிறார்கள். அதிகம் பேசுபவனையும் திட்டுகிறார்கள். திட்டப்படாத மனிதனே உலகத் தில் இல்லை. எப்பொழுதுமே திட்டப்படுபவனாக அல்லது எப்பொழுதுமே போற்றப்படுபவனாக ஒரு மனிதன் இருந்ததும் இல்லை; இருக்கவும் இல்லை; இருக்கப் போவதும் இல்லை. இத்தகைய புத்தரின் போதனைகள் ஆரம்ப காலங்களில் நெறிகளாக தத்துவங்களாக விளங்கியது, பின்னர் கால ஓட்டத்தில் இது ஒரு மதமாக தோற்றம் பெற்றுவிட்டது. எவ்வாறு இருந்தாலும் பெளத்த மதத்தவர்கள் இன்று புத்தரின் கொள்கைகளை சரிவர பின்பற்றுகிறார்களா என்பது என் சிற்றறிவிற்கு சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது. புத்தர் மன்னனாக சகல செளபாக்கியங்களோடு வாழ்ந்த போதும் உலக ஆசைகளையெல்லாம் துறந்து கானகம் சென்று வாழ்ந்தார். மக்களிடம் பிச்சை எடுத்து உண்டார், துறவிகளுக்கும் அவ்வாறே போதித்தார். உணவிற்கு பஞ்சத்தினாலா இல்லை மக்களுக்கு கொடுக்கும் எண்ணம் வளரவேண்டும் என்பதற்காக. புத்தர் (கி.மு.563-கி.மு.483) இளவரசர் சித்தார்த்தர் எனும் இயற்பெயருடைய கௌதம் புத்தர் பெரும் சமயங்களுள் ஒன்றான பௌத்த சமயத்தை நிறுவியவராவார். சித்தார்த்தர் வடகிழக்கு இந்தியாவில் நேப்பாள எல்லையின் அருகிலுள்ள கபில வஸ்து எனும் நகரை ஆண்டு வந்த மன்னரின் மைந்தர் (கௌதம குடும்பத்தையும் சாக்கிய குலத்தையும் சேர்ந்த) சித்தார்த்தர் இன்றைய நேப்பாள எல்லைக்குள்ளிருக்கும் லும்பினியில் கி.மு. 563 இல் பிறந்ததாகக் கூறப்படுகின்றது. அவர் தமது 16 ஆம் வயதில் ஒத்த வயதுள்ள உறவினளைத் திருமணம் செய்து கொண்டார். செல்வம் கொழிக்கும் அரண்மனையில் பிறந்த சித்தார்த்தர் இளவரசருக்கு இன்ப நலன்களுக்குக் குறைவில்லை. ஆயினும் அவர் ஆழ்ந்த அதிருப்தியடைந்திருந்தார். மனிதருள் பலர் ஏழையாக இருப்பதையும், தொடர்ந்து வறுமையில் துன்புறுவதையும், எல்லோரும் நோயுற்று இறுதியில் இறப்பதையும் கண்டார். மறைந்து போகும் இன்பங்களை விட மேலானாதொன்று வாழ்க்கையில் உண்டென்றும், அவற்றை எல்லாம் துன்பமும் இறப்பும் விரைவில் அழித்தொழிக்கும் என்றும் சித்தார்த்தர் கருதினார். கௌதமர் தமது 29 ஆம் வயதில் தம் மூத்த மகன் பிறந்ததும் தாம் வாழ்ந்து வந்த வாழ்கையை துறந்து உண்மையை நாடுவதில் முழு முயற்சியுடன் ஈடுபடத் தீர்மானித்தார். தம் மனைவி, மழலை மகன், உடமைகள் எல்லாம் துறந்து அரண்மனையை விட்டு வெளியேறி, கையில் காசின்றி அலைந்து திரிந்தார். சிறிது காலம் அவர் அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த அறவோரிடம் பயின்றார். அவர்களுடைய போதனைகளை நன்கு கற்ற பின், மனித வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்கள் காட்டிய வழி தமக்கு மன நிறைவளிக்கவில்லை யெனக் கண்டார். கடுமையான துறவே உண்மையான அறிவை அடையும் வழியென்று அப்போது பரவலாக நம்பப்பட்டு வந்தது. ஆகவே கௌதமரும் கடுந்துறவியாக முயன்று, பல ஆண்டுகளாக கடும் நோன்பையும், ஒறுத்தலையும் மேற் கொண்டார். ஆயினும் நாளடைவில் உடலை வருத்துவதால் உள்ளம் குழம்புவதையும் உண்மையான அறிவை அடைய இயலவில்லை என்பதையும் உணர்ந்தார். ஆகவே அவர் வழக்கம் போல் உண்டு, கடுந்துறவைக் கைவிட்டார். வாழ்க்கைப் பிரச்சினைக்களுக்குத் தீர்வு காண அவர் தனிமையில் கடுஞ் சிந்தனையில் ஆழ்ந்தார். இறுதியில் ஒரு நாள் மாலையில் அவர் ஒரு பெரிய அத்தி மரத்தடியில் அமர்ந்திருந்த போது, தம்மைக் குழப்பிய பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கிடைப்பது போல் அவருக்கு தோன்றியது. சித்தார்த்தர் இரவு முழுவதும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார். மறுநாள் காலையில் தாம் ” அறவொளி பெற்ற ” ஒரு புத்தர் என்றும் உறுதியாக உணர்ந்தார். அப்போது அவருக்கு 35 வயது. எஞ்சிய 45 ஆண்டுகளில் அவர் வட இந்தியா முழுவதும் சென்று கேட்க விரும்பிய அனைவருக்கும் தமது புதிய கோட்பாட்டைப் போதித்து வந்தார். கி.மு. 483 இல் அவர் இறப்பதற்குள் ஆயிரக்கணக்கான மக்களை மதம் மாற்றினார். அவர் கூறியவை எழுதப் பெறவில்லை யெனினும், அவருடைய சீடர்கள் அவர் போதனைகள் பலவற்றை மனப்பாடம் செய்திருந்தனர். அவை வாய்மொழி மூலமாகத் தலைமுறையாகப் பரவின. புத்தரின் முக்கியப் போதனைகளைப் பௌத்தர்கள் ” நான்கு உயர் உண்மைகள்” எனச் சுருக்கமாகக் கூறுவர். முதலாவது, மனித வாழ்க்கை இயல்பாகவே துயருடையது. இரண்டாவது, இத்துயரின் காரணம் மனிதனின் தன்னலமும் ஆசையுமாகும். மூன்றாவது, தனி மனிதன் தன்னலத்தையும் ஆசையையும் அடக்கிவிடலாம். எல்லா ஆசைகளும் ஆவல்களும் ஒழிந்த இறுதி நிலை (” அணைதல் அல்லது அவிதல்” எனப் பொருள்படும்) ” நிர்வாணம்” எனப்படும். நான்காவது, தன்னலம், ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும் ” எட்டு வகைப் பாதை” எனப்படும். அவை, நேர்மையான பேச்சு, நேர்மையான செயல், நேர்மையான வாழ்க்கை, நேர்மையான முயற்சி, நேர்மையான தியானம், பௌத்த சமயத்தில் இன வேறுபாடின்றி அனைவரும் சேரலாம். (இந்து சமயம் போலன்றி) இதில் சாதி வேறுபாடு இல்லை. கௌதமர் இறந்த பின் கொஞ்ச காலம் இப்புதிய சமயம் மெதுவாகப் பரவியது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பெரும் இந்தியப் பேரரசரான அசோகர் பௌத்த சமயத்தை தழுவினார். அவரது ஆதரவினால் பௌத்த சமயச் செல்வாக்கும் போதனைகளும் இந்தியாவில் விரைவாகப் பரவியதுடன், பௌத்த சமயம் அண்டை நாடுகளுக்கும் பரவியது. தெற்கில் இலங்கையிலும், கிழக்கே பர்மாவிலும் பௌத்த சமயம் பரவியது. அங்கிருந்து அது தென்கிழக்கு ஆசியா முழுவதும், மலேசியாவிலும், இன்றைய இந்தோனேசியாவிலும் பரவியது. பௌத்த சமயம் வடக்கே திபெத்திலும், வடமேற்கில் ஆப்கானிஸ்தானிலும், மத்திய ஆசியாவிலும் பரவியது. அது சீனாவிலும் பரவியது. அங்கு ஏராளமான மக்கள் அதைத் தழுவினர். அங்கிருந்து அது கொரியாவிற்கும், ஜப்பானுக்கும் பரவியது. இந்தியாவினுள் இப்புதிய சமயம் கி.பி. 500 – க்குப் பிறகு நலிவுறத் தொடங்கி, கி.பி. 1200 – க்குப் பிறகு ஏறக்குறைய முழுவதும் மறைந்து விட்டது. ஆனால் சீனாவிலும், ஜப்பானிலும் அது முக்கிய சமயமாக இருந்தது. திபெத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பல நூற்றாண்டுகளாக அது தலையாய சமயமாக இருந்து வந்துள்ளது. புத்தர் இறந்து பல நூற்றாண்டுகள் வரை அவருடைய போதனைகள் எழுதப் பெறவில்லை. ஆகவே இவரது இயக்கம் பல கிளைகளாகப் பிரிந்தது பௌத்த சமயத்தின் இரு முக்கிய கிளைகளுள் ஒன்று தேரவதா பிரிவு. இது தென்கிழக்கு ஆசியாவில் தழைத்தோங்கியது. இதுவே புத்தர் போதித்த போதனைகளுடன் நெருங்கிய தொடர்புடையதென மேல் நாட்டு அறிஞர் பலர் கருதுகின்றனர். மற்றொரு கிளை மகாயானம். இது பொதுவாக திபெத், சீனா, வட ஆசியாவில் செழித்தோங்கியது. உலகப் பெரும் சமயங்களுள் ஒன்றை நிறுவியவரான புத்தர் இப்பட்டியலில் உயரிடம் பெற தகுதியுடையவர். 80 கோடி முஸ்லீம்களும், 100 கோடி கிறிஸ்தவர்களும் இருக்கும் இவ்வுலகில் 20 கோடி பௌத்தர்களே இருப்பதால், நபிகள் நாயகமும் கிறிஸ்து பெருமானும் கவர்ந்ததை விடக் குறைந்த எண்ணிக்கையுள்ள மக்களையே புத்தர் கவர்ந்தார் என்பது போல் தோன்றுகிறது. ஆயினும் எண்ணிக்கை வேறுபாட்டைக் கொண்டு நாம் தவறான முடிவுகளுக்கு வரலாகாது. பௌத்த சமயத்தின் கருத்துகளையும் கொள்கைகளையும இந்து சமயம் ஈர்த்துக் கொண்டது. பௌத்த சமயம் இந்தியாவில் மறைந்ததற்கு அது ஒரு காரணமாகும். சீனாவில் கூட தம்மை பௌத்தர்களெனக் கருதாதவர் பலரை பௌத்தக் கோட்பாடுகள் கவர்ந்துள்ளன. கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயங்களை விட பௌத்த சமயம் பெரும் அமைதி இயல்புடையது. இன்னா செய்யாமைக் கொள்கை பௌத்த சமய நாடுகளில் அரசியல் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளது. கிறிஸ்து பெருமான் திரும்பவும் உலகிற்கு வருவாரானால் தமது பெயரால் நடைபெறும் பலவற்றைக் கண்டு அதிர்ச்சியடைவரெனவும், அவரைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் வெவ்வேறு பிரிவினரிடையே நிகழும் கொடிய போராட்டங்களைப் பார்த்துத் திகிலடைவாரெனவும் பலமுறை சொல்லப் படுகின்றது. புத்தரும் பௌத்தக் கோட்பாடுகளெனக் கூறப்படும் பல கோட்பாடுகளைக் கண்டு வியப்படைவாரென்பதில் ஐயமில்லை. ஆனால் பௌத்த சமயத்தில் பல கிளைகள் இருப்பினும், இக்கிளைகளிடையே பெரும் வேறுபாடுகள் இருப்பினும், கிறிஸ்துவ ஐரோப்பாவில் நிகழ்ந்தவை போன்ற கொடிய சமயப் போர்கள் பௌத்த வரலாற்றில் நிகழ்ந்ததில்லை. இதைப் பொறுத்தவரையில், கிறிஸ்துவின் போதனைகள் அவரைப் பின்பற்றியவரிடையே மிகுதியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது போல் தோன்றுகிறது. புத்தரும் கன்ஃபூசியஸிம் உலகை ஏறக்குறைய ஒரேயளவில் கவர்ந்துள்ளனர். இருவரும் ஏறக்குறைய ஒரே காலத்தில் வாழ்ந்தனர். அவர்களைப் பின்பற்றியவர்களின் தொகையும் மிகுதியாக வேறுபடவில்லை. நான் புத்தரைக் கன்ஃபூசியஸிக்கு முன்னால் வைப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, சீனாவில் பொதுவுடமைக் கொள்கை தோன்றியதிலிருந்து கன்ஃபூசியஸின் செல்வாக்கு மிகவும் குறைந்து விட்டது. வருங்காலத்தில் கன்ஃபூசியஸின் கருத்துகளை விட புத்தரின் கொள்கைகளே மிக முக்கியமாகக் கருதப்படுமெனத் தெரிகின்றது. இரண்டாவது, கன்ஃபூசியக் கோட்பாடு சீனாவிற்கு வெளியே பரவவில்லை என்பது முந்திய சீன மனப்பாங்கில் கன்ஃபூசியஸின் கருத்துகள் எவ்வளவு மெதுவாகப் பதிந்திருந்தன என்பதைக் காட்டுகிறது. ஆனால் புத்தரின் போதனைகளோ முந்திய இந்தியக் கோட்பாட்டைத் திரும்பக் கூறுவதாக அமையவில்லை. கௌதம புத்தரின் கருத்துகள் புதுமையாக இருந்தாலும், அவருடைய கோட்பாடு பலரைக் கவர்ந்ததாலும், பௌத்த சமயம் இந்திய எல்லையைக் கடந்து மிகத் தொலைவில் பரவியது.